Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: அஜித் புஸ்பகுமார

Go down

வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: அஜித் புஸ்பகுமார Empty வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: அஜித் புஸ்பகுமார

Post by oviya Thu Oct 15, 2015 1:56 pm

வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தலவாக்கலை லிந்துலை நகர சபை செயலாளர் அஜித் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

தலவாக்கலை லிந்துலை நகர சபையில் வரிசெலுத்துபவர்களுக்கு இம்மாதம் 19ம் திகதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்குள் வரிசெலுத்த தவறும் பட்சத்தில் வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் மற்றும் பொருட்கள் நகரசபை ஊடாக பறிமுதல் செய்யப்படும்.

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 31ம் திகதி வரை நகர சபைக்கு வரி செலுத்தும் வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சபைக்கு செலுத்தப்படாத வரிகள் தொடர்பாக
உத்தியோகபூர்வ அறிவிப்பு வரிசெலுத்துபவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வரி செலுத்துபவர்களின் நலன் கருதி நடமாடும் சேவையும் மேற்கொண்டு வருவதுடன் தலவாக்கலை லிந்துலை நகரசபையில் விசேட காரியாலயமும் இயங்கி வருகின்றது.

மேற்படி நகர சபைக்கு செலுத்த வேண்டிய வீடு, வியாபார நிலையம், தொழிற்சாலை வரிகள் உள்ளிட்ட அசையும் அசையா சொத்துக்களின் வரிகளை காலம் தாழ்த்தாது சபைக்கு செலுத்த வேண்டுமென பொதுமக்களை கேட்டுள்ளார்.

நகரசபையின் ஊடாக எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் பல வகுக்கப்பட்டுள்ள நிலையில் வரிசெலுத்துவோர் கடமை உணர்வுடன் செயற்பட வேண்டுமென செயலாளர் பொதுமக்களை வேண்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum