Top posting users this month
No user |
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
Page 1 of 1
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் முன்னர், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டியது சட்டத்தின் தேவை என நீதவான் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் காவற்துறையினர் சட்டரீதியான ஏற்பாடுகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள நீதவான், நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்களை புறந்தள்ளவோ, கீழடிப்புச் செய்யவோ காவற்துறையினருக்கு முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
காவற்துறை சட்டங்களுக்கு அமைய செயற்பட காவற்துறையினர் கட்டுப்பட்டுள்ளனர். காவற்துறையின் கௌரவத்தை நிதி மோசடி விசாரணைப் பிரிவு பாதுகாக்க வேண்டும் என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது தெளிவாகியுள்ளது எனவும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில்,எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதவான், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டடுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டியது சட்டத்தின் தேவை என நீதவான் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் காவற்துறையினர் சட்டரீதியான ஏற்பாடுகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள நீதவான், நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்களை புறந்தள்ளவோ, கீழடிப்புச் செய்யவோ காவற்துறையினருக்கு முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
காவற்துறை சட்டங்களுக்கு அமைய செயற்பட காவற்துறையினர் கட்டுப்பட்டுள்ளனர். காவற்துறையின் கௌரவத்தை நிதி மோசடி விசாரணைப் பிரிவு பாதுகாக்க வேண்டும் என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது தெளிவாகியுள்ளது எனவும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில்,எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதவான், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டடுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum