Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய

Go down

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய Empty மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய

Post by oviya Fri Sep 25, 2015 1:57 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய அறிக்கையானது, இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம் போன்றது என்று சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஜனநாயகத்துக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான சுனந்த தேசப்பிரிய இது தொடர்பில் ஜெனீவாவில் இருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள், ஜனநாயக செயற்பாடுகளை மனித உரிமைகள் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை காலமும் இல்லாத நிலையில் இந்த அறிக்கையில் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் பக்கம் சாதகமான காற்று வீசத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாகும்.

அத்துடன் மனித உரிமைகள் அமர்வின் ஆரம்பத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை அடியொட்டி புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது இலங்கையின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்கான அடையாளமாகும்.

மேலும் எந்தவொரு விடயத்தையும் செய்தே தீரவேண்டும் என்பதாக எந்தவொரு வற்புறுத்தலும் இல்லாத நிலையில்,

குறித்த விடயங்களை இலங்கை செய்து முடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜெனீவா அறிக்கை வெளியாகி இருப்பது இலங்கை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதற்கான அறிகுறியாகும்.

அந்த வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையானது இலங்கை மீதான பாராட்டுப்பத்திரமே அன்றி வேறில்லை என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» தமிழர் காணி, மனித உரிமைகள் தொடர்பில் முக்கிய அறிக்கை அமெரிக்காவில் வெளியீடு
» இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வரவேற்பு! சுனந்த தேசப்பிரிய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum