Top posting users this month
No user |
வவுனியா ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு
Page 1 of 1
வவுனியா ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு
நிரந்தர நியமனம் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் வவுனியா ஆசிரியர்கள் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
வவுனியா மற்றும் வெலிஓயா பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்களே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்ட முடிவை அறிவித்துள்ளனர்.
தமக்கு நிரந்தர நியமனம் கோரி இவர்கள் சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டம் என பல்கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எதிர்பார்த்த பலன் கிட்டாத நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆறு வருட காலமாக பல்வேறு சிரமங்களின் மத்தியில் பணியாற்றும் தமது சேவை குறித்து எந்தவொரு அரசியல்வாதியும் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், நிரந்தர நியமனத்திற்கு வலியுறுத்தியும் வவுனியா தெற்கு கல்வி அலுவலகம் முன்பாக ஒப்பந்த ஆசிரியர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி - வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி சிங்கள ஆசிரியர்கள் இரவிரவாக போராட்டம்
வவுனியா மற்றும் வெலிஓயா பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்களே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்ட முடிவை அறிவித்துள்ளனர்.
தமக்கு நிரந்தர நியமனம் கோரி இவர்கள் சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டம் என பல்கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எதிர்பார்த்த பலன் கிட்டாத நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆறு வருட காலமாக பல்வேறு சிரமங்களின் மத்தியில் பணியாற்றும் தமது சேவை குறித்து எந்தவொரு அரசியல்வாதியும் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், நிரந்தர நியமனத்திற்கு வலியுறுத்தியும் வவுனியா தெற்கு கல்வி அலுவலகம் முன்பாக ஒப்பந்த ஆசிரியர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி - வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி சிங்கள ஆசிரியர்கள் இரவிரவாக போராட்டம்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum