Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்தவின் ஆட்சிக்கால கொலைகளை மூடிமறைக்க முடியாது! பிரதமர் திட்டவட்டம்

Go down

மஹிந்தவின் ஆட்சிக்கால கொலைகளை மூடிமறைக்க முடியாது! பிரதமர் திட்டவட்டம் Empty மஹிந்தவின் ஆட்சிக்கால கொலைகளை மூடிமறைக்க முடியாது! பிரதமர் திட்டவட்டம்

Post by oviya Sun Sep 20, 2015 1:49 pm

தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால கொலைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்தியப் பயணத்தின் வெற்றி குறித்து அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு நெருக்கமான சில அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

முன்னைய ஆட்சியின் கொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முனைந்தால் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி இராணுவத்தினர் அதற்கு முட்டுக்கட்டைகள் போடுகின்றனர். ஊடகங்களும் அவர்களுக்குத் துணை போகின்றன.

தமது சகாக்கள் அநியாயமான முறையில் கொல்லப்பட்டதைக் கூட மறந்து, அவர்களை துரோகிகளாக சித்தரித்து மஹிந்தவையும் சகாக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஊடகங்கள் முன்னிலையில் நிற்கின்றன. ஊடக தர்மத்துக்கும் கௌரவத்துக்கும் இது பாரிய இழுக்காகும்.

ஆனால் யார் என்ன கூறினாலும், தேசியப் பாதுகாப்பை முன்னிறுத்தி தடைபோட முயன்றாலும் மஹிந்த அரசின் கொலைகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அதில் சிறு மாற்றத்திற்கும் இடமில்லை.

அதற்கு ஏதுவாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மாற்றப்பட்டு, புதிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும், அநியாயங்களுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கும் நீதியைப்பெற்றுக் கொடுப்பதில் தனது அரசாங்கம் எவ்வகையான நெருக்கடிகளையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum