Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுப்பர் மார்க்கட்டிற்குள் சென்ற திருடன்: 8 மணிநேரத்திற்கு பின் கைது- கடத்தல் மரம் வவுனியாவில் மடக்கிப்பிடிப்பு

Go down

சுப்பர் மார்க்கட்டிற்குள் சென்ற திருடன்: 8 மணிநேரத்திற்கு பின் கைது- கடத்தல் மரம் வவுனியாவில் மடக்கிப்பிடிப்பு Empty சுப்பர் மார்க்கட்டிற்குள் சென்ற திருடன்: 8 மணிநேரத்திற்கு பின் கைது- கடத்தல் மரம் வவுனியாவில் மடக்கிப்பிடிப்பு

Post by oviya Fri Sep 18, 2015 2:48 pm

கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற திருடன் வெளியில் வர முடியாமல் 8 மணிநேரத்திற்கு மேலாக சிறிய பெட்டி ஒன்றில் மறைந்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பம்பலப்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுப்பர் மார்க்கட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காவற்துறையினரின் காவல் போடப்பட்டிருந்ததால், திருடனுக்கு தப்பிச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர் இரவு நேரங்களில் சுப்பர் மார்க்கட்டுகளில் கதவை உடைத்து உள்ளே சென்று, கொரக்காபுளி, முந்திரி, ஏலக்காய், கராம்பு போன்றவற்றை திருடி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடத்தல் மரம் வவுனியா பொலிசாரால் மடக்கிப்பிடிப்பு

வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை கடத்த முயன்ற போது ஈச்சங்குளம் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, நொச்சிக்குளம் காட்டுப்பகுதியில் வர்த்தக நோக்கத்துடன் மரங்களை வெட்டி விற்பனைக்காக கொண்டு சென்றுகொண்டிருந்த போது ஈச்சங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அவ்விடத்திற்குச் சென்ற பொலிசார் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டபிள்யூ.பண்டார தலைமையிலான பொலிசாரே இக் கடத்தல் சம்பவத்தை முறியடித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum