Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முல்லைத்தீவு விபத்தில் இளைஞன் பலி - தலவாக்கலையில் சடலம் மீட்பு

Go down

முல்லைத்தீவு விபத்தில் இளைஞன் பலி - தலவாக்கலையில் சடலம் மீட்பு Empty முல்லைத்தீவு விபத்தில் இளைஞன் பலி - தலவாக்கலையில் சடலம் மீட்பு

Post by oviya Wed Sep 16, 2015 3:06 pm

முல்லைத்தீவு மல்லாவி துணுக்காய் வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலியாகியுள்ளார்.
மல்லாவியில் இருந்து துணுக்காய் நோக்கி சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மல்லாவி நோக்கி வந்த லொறியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் லொறி சாரதியும் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மல்லாவி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ரி. பரமேஸ்வரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

விபத்துக்கு காரணமான லொறி சாரதி கண்டி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மல்லாவி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலையில் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையிலிருந்து ஆணிண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேற்படி தோட்ட தொழிலாளர்கள் அப்பகுதிக்கு தொழிலுக்காக செல்லும் போது இவ்வாறு சடலத்தை கண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணைகளின் போது குறித்த நபர் விஷம் அருந்தியுள்ளதாகவும் வட்டகொடை மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 61 வயதுடைய நாராயணன் ராமையா எனவும் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum