Top posting users this month
No user |
வாகன விபத்துக்களால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கும் மேல் பலி
Page 1 of 1
வாகன விபத்துக்களால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கும் மேல் பலி
இலங்கையில் இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த கோரமான வாகன விபத்துக்களில் 12 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பிரதான விபத்து மினுவங்கொட மிரிஸ்வத்தை பகுதியில் நிகழ்ந்தது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பயணித்த டிபெண்டர் வாகனம் இரண்டு தனியார் பேருந்துகளில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் முச்சக்கர வண்டி ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவங்களில் சிலர் காயமடைந்துள்ளனர். சாரதிகளின் கவனமின்மை காரணமாகவே விபத்துக்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தினமும் 10 பேர் வாகன விபத்துக்களில் கொல்லப்படுகின்றனர். வாகன போக்குவரத்து நெரிசல், வீதிகளில் காணப்படும் குறைப்பாடுகள், கவனமின்றி வாகனத்தை ஓட்டுவது போன்ற விடயங்கள் விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதில் பிரதான விபத்து மினுவங்கொட மிரிஸ்வத்தை பகுதியில் நிகழ்ந்தது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பயணித்த டிபெண்டர் வாகனம் இரண்டு தனியார் பேருந்துகளில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் முச்சக்கர வண்டி ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவங்களில் சிலர் காயமடைந்துள்ளனர். சாரதிகளின் கவனமின்மை காரணமாகவே விபத்துக்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தினமும் 10 பேர் வாகன விபத்துக்களில் கொல்லப்படுகின்றனர். வாகன போக்குவரத்து நெரிசல், வீதிகளில் காணப்படும் குறைப்பாடுகள், கவனமின்றி வாகனத்தை ஓட்டுவது போன்ற விடயங்கள் விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum