Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ராஜபக்ச குடும்பம்

Go down

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ராஜபக்ச குடும்பம் Empty கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ராஜபக்ச குடும்பம்

Post by oviya Mon Aug 24, 2015 3:22 pm

ராஜபக்ச குடும்பத்தினர் மோசடியான முறையில் கொள்ளையிட்டதாக கூறப்படும் பொதுமக்களின் பணத்தில் பெரும் பகுதி சீசெல்ஸ் தீவுகளிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது.
சீசெல்ஸ் தீவுகளில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இலங்கை வங்கி கிளையின் ஊடாக ராஜபக்சவினரின் கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதாக காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு குறித்து நடத்திய விசாணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை பெற நிதி மோசடி விசாரணைப் பிரிவு கேட்டை நீதவான் நீதிமன்றத்தில் பீ. அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
சீசெல்ஸ் நாட்டில் இலங்கை வங்கியின் கிளையை திறப்பதற்கான எந்த நியாயமான தேவைகளும் இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து அதிகளவில் பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக பண பரிமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அறியகிடைத்துள்ளது.
இதனடிப்படையில் ராஜபக்ச குடும்பத்தினர் இந்த இலங்கை வங்கி கிளையை கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக நடத்தி வந்துள்ளதாகவும் இதன் மூலம் அவர்கள் எப்படி பணத்தை சம்பாதித்தனர் என்ற தகவல்கள் வெளியா வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தவிர மிஹின் லங்கா விமான நிறுவனம் சீசெல்ஸ் நாட்டுக்கு நடத்திய சேவையில் பயணம் செய்த பயணிகள் பற்றிய விபரங்கள் குறித்தும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அங்குள்ள இலங்கை வங்கியின் கிளை அதிகாரிகளும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum