Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேர்தல் முடியும்வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன்

Go down

தேர்தல் முடியும்வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன் Empty தேர்தல் முடியும்வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன்

Post by oviya Tue Aug 11, 2015 2:52 pm

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பிரம்மகுமாரிகள் சபையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்து கொண்டார்.



இந்நிகழ்வில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் கேள்விகள் தொடுக்க முற்பட்டவேளை,

நான் பேசவில்லை. தேர்தல் முடியும் வரையில் நான் ஊமையாக இருக்கவே விரும்புகிறேன். நான் பேசியதாக அண்மையில் இணையங்களில் வெளியான வீடியோ தொடர்பில் நிச்சயமாக பின்னர் பதில் கொடுப்பேன் என்றார்.

தேர்தலுக்காக தமிழ்த் தேசிய அரசியலில் மிகவும் கீழ்த்தரமான காட்சிகள் அரங்கேறுகின்றன..!

கொள்கை, கோட்பாடு, மக்கள் அபிமானம் என்கிற ரீதியிலேயே தேர்தல்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டியவை. ஆனால், இன்று கட்டுக்கதைகள், பொய்யுரைகள், போலிகளின் கோலோச்சுகை என்று பொறுப்பற்ற அடாவடித் தனங்களினால் வெற்றி கொள்ளப்பட வேண்டியது எனும் நிலைக்கு நகர்த்தியிருக்கின்றது.

அதன் ஒரு கட்டம், ‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானம். 18 பேர் கையெழுத்திட்டுள்ளனர் உள்ளிட்ட கட்டுக்கதைகள் செய்திகளாக எழுதப்படும் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. அதை எந்தவித உறுதிப்படுத்தல்களுமின்றி பலரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பொதுத் தேர்தலொன்று நெருக்கிய வந்துள்ள நிலையில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுமா? என்கிற குறைந்த பட்ச யோசனையின்றி, இவ்வாறான கட்டுக்கதைகள் புனையப்படுகின்றன. இந்தக் கட்டுக்கதைகள் தமிழ்த் தேசிய அரசியலினை படுகுழியில் தள்ளுவதற்கான முயற்சிகளின் போக்கில் நிகழ்த்தப்படுகின்றது.

மக்களை மடையர்கள் எனும் நிலைப்பாட்டோடு அணுகும் தரப்பினரே இவ்வாறான விடயங்களை தொடர்ந்தும் முன்வைக்கின்றார்கள்.

இவ்வாறான, நடவடிக்கைகள் மூலம் தேர்தலை வெற்றி கொள்ளலாம் என்று யோசித்து களமாற்றுகின்றவர்கள், தோல்வியின் பின்னர் அழுது புரண்டு அரற்ற வேண்டியிருக்கும். அந்த ஆற்றாமை என்பது, இன்னும் பயங்கரமானதாக இருக்கும்.

தமிழ்த் தேசிய அரசியலில் மிக அவமானகரமான காட்சிகளை அரங்கேற்றும் தரப்புக்களை மக்கள் கண்டறிந்து அகற்ற வேண்டிய தருணமிது… மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. நிச்சயமாக அதைச் செய்வார்கள்!
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum