Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் வழங்கப்படவில்லை: தொழிலாளர்கள் அதிருப்தி

Go down

மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் வழங்கப்படவில்லை: தொழிலாளர்கள் அதிருப்தி Empty மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் வழங்கப்படவில்லை: தொழிலாளர்கள் அதிருப்தி

Post by oviya Mon Aug 10, 2015 2:50 pm

1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவாரத்தையின் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால் அப்பேச்சுவார்தையிலிருந்து இ.தொ.கா.வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6 ஆம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது. இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்காலப்பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின்
நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர்.

இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினார். இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததல் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.

நிலைமையை கருத்தில்கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான
பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி தொழில் உறவுகள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றதுடன் இப்பேச்சுவார்த்தையில் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.

இப்பேச்சுவாரத்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 'இம்மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், கடன்வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை எதிர்பார்த்திருந்த நடைபாத வியாபாரிகள், சிறுவியாபாரிகளும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். சில தோட்டங்களில் 10.08.2015 அன்று மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum