Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாமக்கல் தலித் இளைஞர் மரணம்..வாட்ஸ் அப்பில் உலா வரும் ஓடியோ

Go down

இளைஞர் - நாமக்கல் தலித் இளைஞர் மரணம்..வாட்ஸ் அப்பில் உலா வரும் ஓடியோ Empty நாமக்கல் தலித் இளைஞர் மரணம்..வாட்ஸ் அப்பில் உலா வரும் ஓடியோ

Post by oviya Sun Jun 28, 2015 3:07 pm

நாமக்கலை சேர்ந்த தலித் இளைஞரின் மரணம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு ஓடியோ உலா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் அருகே ரயில் தண்டவாளத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் சடலமாக கிடந்தார்.

காதல் விவகாரத்தில், கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இது குறித்து திருச்செங்கோடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கோகுல்ராஜின் உடலை சிறப்பு மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோகுல்ராஜ் உடலை சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும், தடய அறிவியல் துறை தலைவருமான மருத்துவர் சம்பத்குமார் தலைமையிலான குழு பிரேதப் பரிசோதனை செய்யவும், அதை வீடியோ பதிவு செய்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கோகுல்ராஜ் மரணம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் சம்பவத்தன்று நடந்தது என்ன என்பது குறித்து, இறந்துபோன கோகுல்ராஜின் சகோதரரிடம், கோகுல்ராஜின் தோழி சுவாதி கூறுவது போல் உள்ளது.

அதில், கோகுல்ராஜ் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதற்காக திருச்செங்கோடு வந்தார். பின்னர் இருவரும் கோயிலுக்கு சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது பொலிசார் மற்றும் 3 பேர் வந்து எங்களிடம் விசாரித்தனர்.

விசாரித்த பிறகு யுவராஜ் அழைக்கிறார் வா என்று கூறி கோகுல்ராஜை அழைத்து சென்றுவிட்டனர். பின்னர் என்னை பொலிசார் மற்றும் சிலர் அழைத்துக்கொண்டு மலையடிவாரத்திற்கு வந்தனர்.

அப்போது, நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்டனர். இல்லை என்று கூறினேன்.

ஆனால் கோகுல்ராஜ் நீங்கள் இருவரும் காதலிப்பதாக கூறுகிறான் என்று கூறினர்.

கண்டிப்பாக அப்படி கூறியிருக்க மாட்டான். நாங்கள் இருவரும் நண்பர்களாவே பழகிவந்தோம். நண்பர்கள் எப்படி காதலிக்க முடியும் என்று கேட்டேன்.

பின்னர் மலையடிவாரம் வந்ததும் காரில் கோகுல்ராஜை ஏற்றிச்சென்றனர்.

என்னிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு என்னை அனுப்பி விட்டனர். மாலையில் என் ஊருக்கு வந்து செல்போனை கொடுப்பதாக கூறினர்.

இதையடுத்து நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன் என அந்த உரையாடலில் உள்ளது.

இது உண்மையாகவே சம்பந்தப்பட்டவர்கள் பேசியது தானா அல்லது போலியா என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum