Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி: போட்டி போட்டு புனித மணல் எடுத்த பக்தர்கள்

Go down

மணல் - கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி: போட்டி போட்டு புனித மணல் எடுத்த பக்தர்கள் Empty கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி: போட்டி போட்டு புனித மணல் எடுத்த பக்தர்கள்

Post by oviya Tue Dec 23, 2014 2:06 pm

திருச்செந்தூர் காயா மொழி அருகே உள்ள தேரிக் குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா கடந்த மாதம் 17–ந்தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி சிறப்பு பூஜைகள், மாலை 6 மணிக்கு வில்லிசை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான கடந்த 15–ந்தேதி காலை 11 மணி மற்றும் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை, சமயசொற்பொழிவு, இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு உற்சவர் தெருவீதி உலா, தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடந்தது.

நேற்று 16–ந்தேதி காலை 6 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு தாமிர பரணி தீர்த்தம் யானை மீது வைத்து வெள்ளிக்குடத்தில் எடுத்து வருதல், தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடந்தது.

மாலை 4 மணிக்கு கோவில் பின்புறமுள்ள செம்மணல் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் பூசாரி, கள்ளர் என்ற இளநீரை கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து கள்ளர் வெட்டுக்கு பயன்படும் அரிவாளை மற்றொரு பூசாரி கொண்டு வந்தார்.

மாலை 5 மணி அளவில் கள்ளர் என்ற இளநீர் வெட்டப்பட்டு கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கள்ளர்வெட்டு நடந்த இடத்தில் இருந்து போட்டி போட்டு புனித மணல் எடுத்தனர். பக்தர் கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து தேரி குடியிருப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum