Top posting users this month
No user |
Similar topics
வேண்டும் வரம் தரும் ஒண்டி கருப்பண்ணசுவாமி
Page 1 of 1
வேண்டும் வரம் தரும் ஒண்டி கருப்பண்ணசுவாமி
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே பெரியமிளகுபாறையில் சாலை ஓரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு 3 பனை மரங்கள், ஒரு சூலம் இருந்தது. மக்கள் வழிபட்டு வந்தார்கள். அனைவரும் பொன்னையா சாமி என்று அழைக்கும் அப்பகுதியை சேர்ந்த இக்கோயில் பூசாரி மதுரையில் இருந்து வந்து திருச்சியில் மின்வாரிய அலுவலகத்தில் பணியில் சேருகிறார். சிறு வயது முதல் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் தன் அலுவலகத்துக்கு எதிராக இருந்த பனை மரங்களையும், சூலத்தையும் பார்க்கிறார். அவருக்குள் ஏதோ ஒரு அதிர்வு தோன்றியது. அன்று இரவே கருப்பசாமி அவர் கனவில் வந்து, தான் ஒண்டிகருப்பாய் இங்கு வாசம் செய்கிறேன்.
எனக்கு ஒரு கோயில் கட்டு என்று உத்தரவிட்டார். சாதாரண உத்தியோகம், சொற்ப சம்பளம், எப்படி கோயில் கட்டுவது என்று யோசித்தார். ஆனால் யாரிடமும் யாசிக்கவில்லை. முதலில் அந்த சூலத்துக்கு ஒரு கூரை வேய்ந்தார். பின்னர் ஒரு சிறிய மூலக்கருப்பு சிலை செய்து அங்கு பிரதிஷ்டை செய்கிறார். மக்கள் அதிகமாக வந்து வழிபட ஆரம்பித்தனர். நண்பர்கள், ஊர் பொது மக்கள் உதவிட முன்வந்தனர். பின்னர் ஒரு சிறிய கோயிலை எழுப்புகிறார். தான் கனவில் கண்ட குதிரை மேல் அமர்ந்த கருப்பசாமி இந்த வடிவில், இந்த உருவில் இருந்தார் என்று விளக்கி சொல்ல குதிரையும், கருப்பண்ணசாமியும் சுதையில் சிற்பியால் அழகாக வடிக்கப்பட்டது.
பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. அது முதல் திருச்சியில் மிக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக ஒண்டி கருப்பு கோயில் விளங்கி வருகிறது. கோயில் இருப்பது சாலை போக்குவரத்துக்கு இடையூறு என்றார்கள். பின்னால் இடம் இருந்தது. அந்த இடத்தில் புதிதாக கோயில் கட்டப்பட்டது. அருள்மிகு ஸ்ரீஒண்டி கருப்பண்ணசாமி, ஸ்ரீராஜகாளியம்மன் இங்கு வேண்டியவர்க்கு வேண்டும் வரம் தரும் தெய்வங்களாக அருள்பாலிக்கிறார்கள். இங்கு வந்து வேண்டினால், வேண்டியது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது. இன்று காப்பு கட்டப்படுகிறது. வரும் 3ம் தேதி பால்குட ஊர்வலம் நடக்கிறது. 5ம் தேதி உக்கிர பூஜை மற்றும் விடையாற்றி விழா நடக்கிறது.
எனக்கு ஒரு கோயில் கட்டு என்று உத்தரவிட்டார். சாதாரண உத்தியோகம், சொற்ப சம்பளம், எப்படி கோயில் கட்டுவது என்று யோசித்தார். ஆனால் யாரிடமும் யாசிக்கவில்லை. முதலில் அந்த சூலத்துக்கு ஒரு கூரை வேய்ந்தார். பின்னர் ஒரு சிறிய மூலக்கருப்பு சிலை செய்து அங்கு பிரதிஷ்டை செய்கிறார். மக்கள் அதிகமாக வந்து வழிபட ஆரம்பித்தனர். நண்பர்கள், ஊர் பொது மக்கள் உதவிட முன்வந்தனர். பின்னர் ஒரு சிறிய கோயிலை எழுப்புகிறார். தான் கனவில் கண்ட குதிரை மேல் அமர்ந்த கருப்பசாமி இந்த வடிவில், இந்த உருவில் இருந்தார் என்று விளக்கி சொல்ல குதிரையும், கருப்பண்ணசாமியும் சுதையில் சிற்பியால் அழகாக வடிக்கப்பட்டது.
பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. அது முதல் திருச்சியில் மிக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக ஒண்டி கருப்பு கோயில் விளங்கி வருகிறது. கோயில் இருப்பது சாலை போக்குவரத்துக்கு இடையூறு என்றார்கள். பின்னால் இடம் இருந்தது. அந்த இடத்தில் புதிதாக கோயில் கட்டப்பட்டது. அருள்மிகு ஸ்ரீஒண்டி கருப்பண்ணசாமி, ஸ்ரீராஜகாளியம்மன் இங்கு வேண்டியவர்க்கு வேண்டும் வரம் தரும் தெய்வங்களாக அருள்பாலிக்கிறார்கள். இங்கு வந்து வேண்டினால், வேண்டியது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது. இன்று காப்பு கட்டப்படுகிறது. வரும் 3ம் தேதி பால்குட ஊர்வலம் நடக்கிறது. 5ம் தேதி உக்கிர பூஜை மற்றும் விடையாற்றி விழா நடக்கிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum