Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை அகதிகளுக்கு தமிழக அரச தொழில் பயிற்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு

Go down

தொழில் - இலங்கை அகதிகளுக்கு தமிழக அரச தொழில் பயிற்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு Empty இலங்கை அகதிகளுக்கு தமிழக அரச தொழில் பயிற்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு

Post by oviya Sat Feb 07, 2015 12:00 pm

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இலங்கை தமிழ் அகதி மாணவ, மாணவியர்கள் அனுமதிக்கு 5 சதவீத இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு உள்ள நடைமுறைகளை, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இலங்கை தமிழ் அகதி மாணவர்களின் சேர்க்கையிலும் பின்பற்றலாம் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

தமிழகப் பள்ளிக்கூடங்களில் படித்த இலங்கை அகதிகளுடைய குழந்தைகளை பொதுப்பட்டியலில், தரவரிசையின் அடிப்படையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

ஈழ அகதிகள் மறுவாழ்வு நிறுவனத்தின் கோரிக்கையினையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரின் பரிந்துரையினையும் அரசு பரிசீலித்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இனிவரும் கல்வியாண்டுகளில் இலங்கை தமிழ் அகதி மாணவர்களை, தமிழக பள்ளிக்கூடங்களில் படித்த இலங்கை அகதிகளுடைய குழந்தைகளை பொதுப்பட்டியல் தரவரிசையின் அடிப்படையில் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட தலைமையிடத்து வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட ஆளறிச் சான்று, அகதிகள் முகாம்களில் பதிவு செய்யப் பெறாதவர்கள் அவர்களுடைய விசா மற்றும் கடவுச்சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், இலங்கை அகதி மாணவர்களை பொதுப்பட்டியலில் தரவரிசை அடிப்படையில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளலாம் என்னும் நடைமுறைகளை பின்பற்றி சேர்க்கைக்கு அனுமதிக்கலாம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum